‘கல்லூரியில் தாய் அளித்த புகாரால்’... ‘மகன் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறிப்போன குடும்பம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகனின் எதிர்காலம் கருதி தாய் கல்லூரியில் அளித்த புகாரால், மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘கல்லூரியில் தாய் அளித்த புகாரால்’... ‘மகன் எடுத்த விபரீத முடிவு’... ‘பதறிப்போன குடும்பம்’!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தான் குப்பம் பகுதியில், சுரேஷ்குமார் தனது தாய், தந்தை உட்பட குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள, தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் மகன் சரியாக படிக்கவில்லை என தாய் ராஜேஸ்வரி திட்டியதால் மனமுடைந்த சுரேஷ்குமார், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வெளியே சென்ற மகன் இரவாகியும் வீட்டுக்கு வராததாலும், செல்ஃபோன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும் அச்சமடைந்த தாய், மகன் காணவில்லை என அருகில் உள்ள கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  இதையடுத்து  கல்லூரி மாணவனை தேடி வந்த நிலையில், சென்னை உத்தண்டி கடற்கரையில், சுரேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சுரேஷ்குமார் பெற்றோர்களும், கேளம்பாக்கம் போலீசாரும் கடலில் விழுந்து இறந்தது சுரேஷ்குமார் தான் என உறுதி செய்தனர். அப்போது மகனின் உடலைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் உடலை மீட்ட கேளம்பாக்கம் போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, `சுரேஷ்குமார், இன்ஜினீயரிங் படித்துவந்தசமயத்தில் அவரின் நடவடிக்கைகளைப் பார்த்து குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். இதனால், சுரேஷ்குமார் படிக்கும் கல்லூரிக்குச் சென்ற அவரின் தாய், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் மகன் குறித்து விசாரித்துள்ளார். பின்னர், சுரேஷ்குமார், சரியாகப் படிப்பதில்லை. இதனால் அவரின் எதிர்காலம் உங்களிடம்தான் உள்ளது என்று கண்ணீர் மல்க பேராசிரியர்களிடம் கூறியுள்ளார்.

இதனால், கல்லூரி நிர்வாகமும், ராஜேஸ்வரியிடம் கவலைப்படாதீர்கள், சுரேஷ்குமாருக்கு அறிவுரைகளைச் சொல்கிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து சுரேஷ்குமாரிடம் பேசிய பேராசிரியர்கள், நன்றாகப் படிக்கும்படி கூறியுள்ளனர். இதனால், மனமுடைந்த சுரேஷ்குமார், வீட்டிற்கு வந்து தாயுடன் சண்டையிட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்னர் வெளியில் சென்ற அவர், கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்’ என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SUICIDE, CHENNAI, ENGINEERINGCOLLEGE