சென்னையில் நடிகைகளை காட்டி ‘ஆபாச’ வீடியோ.. 2 பைனான்சியர்கள் சிக்கினர்.. பரபர தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை தொழிலதிபரை நடிகைகளுடன் நெருக்கமாக காட்டி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடிகைகளை காட்டி ‘ஆபாச’ வீடியோ.. 2 பைனான்சியர்கள் சிக்கினர்.. பரபர தகவல்..!

சென்னை பாண்டிபஜார் ராமன் தெருவை சேர்ந்தவர் இளம் தொழில் அதிபரான ராஜா. இவருக்கு தமிழகம் முழுவதும் பல சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. மேலும் திருச்சியில் ஒரு ஷாப்பிங் மால் உள்ளது. இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகார் குறித்து தெரிவித்த போலீசார், ‘கடந்த 2014-ம் ஆண்டு தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பைனான்சியர்களான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தொழிலதிபர் ராஜாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களுடன் ராஜா நெருங்கிப் பழகி வந்துள்ளார். அப்போது ராஜாவுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருவதை அவர்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு தொழிலதிபர் ராஜாவை மது விருந்துக்கு பைனான்சியர்கள் அழைத்துள்ளனர். அந்த விருந்துக்கு நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் பலரும் வந்துள்ளனர். கேக் வெட்டிய பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ராஜா மது அருந்தியுள்ளார். மதுபோதையில் இருந்த ராஜாவை நட்சத்திர ஓட்டலில் அறை ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அப்போது நடிகைகளை நிர்வாணமாக அனுப்பி ராஜாவுடன் அவர்கள் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து உள்ளனர்.

இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் தொழிலதிபர் ராஜாவின் செல்போனுக்கும் அந்த வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, பைனான்சியர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். உடனே இந்த வீடியோவை ராஜாவின் வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பப் போவதாக மிரட்டி உள்ளனர். அப்படி அனுப்ப வேண்டாம் என்றால் 2 கோடி ரூபாய் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து பேரம் பேசி 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென ஒரே தவணையாக 2.50 கோடி ரூபாய் வேண்டும் அல்லது நடிகைகளுடன் இருக்கும் வீடியோவை வெளியே விட்டு விடுவோம் என்று பைனான்சியர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, இதுகுறித்து சென்னை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பைனான்சியர்களான ராஜா மற்றும் கார்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நிர்வாணமாக இருந்த நடிகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நடிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ACTRESS, BUSINESSMAN, CHENNAI

மற்ற செய்திகள்