'பேக், பாக்கெட்னு எல்லா எடத்துலையும்...' 'சல்லடை போட்டு தேடியும் எங்கையுமே கெடைக்கல...' 'ஆனாலும் 'அந்த ஐட்டம்' அவரு கிட்ட தான் இருந்துருக்கு... - அதிர்ந்து போன அதிகாரிகள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமானநிலையத்தில் ரூ.26.52 லட்சம் மதிப்பிலான தங்கம் துபையில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

'பேக், பாக்கெட்னு எல்லா எடத்துலையும்...' 'சல்லடை போட்டு தேடியும் எங்கையுமே கெடைக்கல...' 'ஆனாலும் 'அந்த ஐட்டம்' அவரு கிட்ட தான் இருந்துருக்கு... - அதிர்ந்து போன அதிகாரிகள்...!

சமீபகலமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பலகட்ட பரிசோதனைகளும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் துபைலிருந்து தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணியை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அவருடைய பேக், பாக்கெட் போன்றவற்றில் எதுவும் கிடைக்கவில்லை. அவரின் உடலின் மலக்குடலில் இருந்து ரூ.26.52 லட்சம் மதிப்பிலான 722 கிராம் எடையிலான தங்கத்தைக் கடத்தி வந்தது கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதன்காரணமாக தங்கம் கடத்திவந்த நபரை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்