"அவங்க மேல டவுட்டா இருக்கு"... கூப்பிட்டு 'சோதனை' பண்ணதுல... காத்திருந்த 'அதிர்ச்சி'... சென்னை 'விமான' நிலையத்தில் 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை விமான நிலையத்தில் இன்று எமிரேட்ஸ் விமானத்தில் வந்த 7 பேரை சந்தேகத்தின் பெயரில், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பிடித்து அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

"அவங்க மேல டவுட்டா இருக்கு"... கூப்பிட்டு 'சோதனை' பண்ணதுல... காத்திருந்த 'அதிர்ச்சி'... சென்னை 'விமான' நிலையத்தில் 'பரபரப்பு'!!!

அப்போது அவர்களை சோதனை செய்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது உடலில், தங்கத்தை பசை பயன்படுத்தி ஒட்டி வைத்து கடத்தி வந்ததை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மொத்தமாக அவர்கள் அனைவரிடமும் இருந்து மொத்தம் 1 கிலோ 430 கிராம் எடையிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகும்.

இதே போல, சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்திற்கு வந்த 7 பேரிடம் இருந்து சுமார் 1 கிலோ வரை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்