ஓ... இது தான் '2,000 ரூபாய்' நோட்டா...! 'நாங்க பார்த்ததே இல்லங்க...' 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த காரியம்...' - சிசிடிவி பார்த்தப்போ தெரிய வந்த உண்மை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாட்டை சேர்ந்த மர்மநபர்கள் சிலர் நூதன முறையில் பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓ... இது தான் '2,000 ரூபாய்' நோட்டா...! 'நாங்க பார்த்ததே இல்லங்க...' 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த காரியம்...' - சிசிடிவி பார்த்தப்போ தெரிய வந்த உண்மை...!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூர் கிராமத்தில் ஜெயகிருஷ்ணன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

நேற்று அவரின் பெட்ரோல் பங்கிற்கு வந்த சில வெளிநாட்டினர், தாங்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்த்ததில்லை என ஜெயகிருஷ்ணனிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

இதனை நம்பிய ஜெயகிருஷ்ணனோ வெளிநாட்டவர்கள் தானே என நம்பி தன்னிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் வெளிநாட்டினருக்கு காட்டியுள்ளார்.

அதைப்பார்த்த அந்த வெளிநாட்டவர்கள் அவரிடம் பேசிக்கொண்டே அங்கிருந்த 83 ஆயிரம் ரூபாயை பேண்ட் பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளனர்.

வெளிநாட்டவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்தே தன்னிடம் இருந்த பணம் காணாமல் போனதை உணர்ந்த ஜெயகிருஷ்ணன், சிசிடிவி மூலம் வெளிநாட்டினர் பணம் திருடி சென்றதை கண்டறிந்தார்.

உடனடியாக, இந்த திருட்டு தொடர்பாக ஜெயகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வழக்கு பதிவு செய்து வெளிநாட்டினரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்