'கார் ஓனர் வெளிய வரதுக்குள்ள...' மொதல்ல 'அந்த வேலையை' பண்ணிட்டு... 'மெயின் ப்ளான் அதுக்கு அடுத்தது...' - பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளைஞர் ஒருவர் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இருந்து மர்ம நபர் நூதன முறையில் லேப்டாப்பை திருடி செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

'கார் ஓனர் வெளிய வரதுக்குள்ள...' மொதல்ல 'அந்த வேலையை' பண்ணிட்டு... 'மெயின் ப்ளான் அதுக்கு அடுத்தது...' - பரபரப்பு சம்பவம்...!

காரின் உரிமையாளர் வணிக வளாகத்திற்கு முன் உள்ள சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வெளியே வருகிறார்.

உரிமையாளர் காரைவிட்டு இறங்குவதற்குள் பின்னிருந்து அங்கு வந்த மர்ம நபர்  ஒருவர் காரின் பின்பக்க கதவை அவருக்கு தெரியாமல் மெதுவாக திறந்து வைக்கிறார், காரின் உரிமையாளர் அவரின் பணிக்காக அங்கிருந்து சென்றதும் காருக்கு உள்ளே சென்று லேப்டாப் பையை திருடிக்கொண்டு வெளியேறுகிறார்.

இவ்வாறு திட்டம் போட்டு திருடுவது சிசிடிவி காட்சிகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காட்சியை காண்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்