"சேர்ந்து வாழலாம் வா".. மனைவியை சமாதானம் செய்ய மாமியார் வீட்டுக்கு போன கணவர் கொலை..! தமிழகத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பாளையம் அருந்ததியர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 44). இவர் தனியார் நூற்பாலை ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

"சேர்ந்து வாழலாம் வா".. மனைவியை சமாதானம் செய்ய மாமியார் வீட்டுக்கு போன கணவர் கொலை..! தமிழகத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்

Also Read | பிகில் விஜய் ஸ்டைலில் பயிற்சியாளர் செய்த காரியம்.. "அர்ஜென்டினாவ சவூதி அரேபியா தோக்கடிச்சது இப்படி தான்".. வைரலாகும் வீடியோ!!

இதற்கு மத்தியில், அதே பகுதியை சேர்ந்த சரிதா என்ற பெண்ணை காதலித்து வந்த தனபால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் தனபால் - சரிதா தம்பதியருக்கு ஜெய ஸ்ரீ என்ற மகளும், நித்திஷ் குமார் என்ற மகனும் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு உருவானதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டிற்கும் சரிதா சென்று அங்கே அவர் வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்கள் முன்பாக, தனது மனைவி சரிதாவை சமாதானம் பேசி மீண்டும் அழைத்து வருவதற்காக மாமியார் வீட்டிற்கு தனபால் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அங்கே வாக்குவாதம் உருவானதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அது மட்டுமில்லாமல், சமாதானம் பேச சென்ற தனபாலை மனைவி சரிதா, மாமியார், மாமனார் மற்றும் மைத்துனர் உள்ளிட்டோர் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதில் மயங்கி விழுந்த தனபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தனபாலின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சரிதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 4 பேரையும் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், தனபாலை கொலை செய்ததை சரிதா உள்ளிட்டோர் ஒப்புக் கொள்ளவும் செய்தனர். தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரத்தில் கல்லால் தாக்கி கொலை செய்து விட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை அழைத்து வர சென்ற கணவரை மனைவியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்த விஷயம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "எனக்கு ஒரு செய்தி கெடச்சுருக்கு".. கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு.. நண்பருக்கு ஷ்ரத்தா அனுப்பிய மெசேஜ்!!.. அதிர்ச்சி!!

SALEM, HUSBAND, WIFE, CLASH

மற்ற செய்திகள்