'ஆண்கள் டாய்லெட்டை கிளீன் செய்ய போன பணியாளர்'... 'கழிவறையில் கண்ட அதிர்ச்சி'... விமான நிலையத்தில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விமான நிலைய பகுதி என்பது பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'ஆண்கள் டாய்லெட்டை கிளீன் செய்ய போன பணியாளர்'... 'கழிவறையில் கண்ட அதிர்ச்சி'... விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு விமானங்கள் புறப்படும் பகுதிக்கு அருகிலுள்ள ஆண்கள் கழிவறையில் செல்வம் என்ற தூய்மை பணியாளர் சுத்தம் செய்யச் சென்றுள்ளார். அப்போது கழிவறைக்கு உள்ளே துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். உடனே இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

Bullets found inside a bathroom at Coimbatore International Airport

உடனே அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எப்.,) துப்பாக்கித் தோட்டாக்களைக் கைப்பற்றி பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தார்கள். கைப்பற்றப்பட்டதில் எஸ்.எல்.ஆர்., ரக துப்பாக்கி தோட்டாவும், மூன்று 9 எம்.எம். துப்பாக்கி தோட்டாக்களும், இரு போலி தோட்டாக்களும் இருந்தன. பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்