தங்கச்சிக்கு கல்யாணம்.. பாசமாக வளர்த்த காளையை பரிசாக கொடுத்த அண்ணன்.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மானாமதுரை அருகே பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, நாய்கள், கிடா ஆகியவற்றை திருமணத்தன்று சகோதரிக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் அவரது சகோதரர். இந்த சம்பவம் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

தங்கச்சிக்கு கல்யாணம்.. பாசமாக வளர்த்த காளையை பரிசாக கொடுத்த அண்ணன்.. நெகிழ்ச்சி வீடியோ..!

Also Read | "எனக்கு என்ன நடந்துச்சோ.. அவங்களுக்கும் அது நடக்கணும்".. பாக். பவுலருக்கு ரிஸ்வான் போட்ட ஆர்டர்.. வீடியோ..!

பொதுவாக திருமணம் என்றாலே மணப்பெண்ணுக்கு அவரது வீட்டினர் தங்கம், வெள்ளி, கார் பைக் உள்ளிட்ட சீர்வரிசைகளை அளித்து பார்த்திருப்போம். காலங்காலமாக இதுபோன்ற நடவடிக்கைகள் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மானாமதுரை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது தங்கையின் திருமணத்தன்று வித்தியாசமான சீர்வரிசைகளை அளித்து உள்ளார். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Brother Surprise Gift to Newly Wed sister in Manamadurai

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த தம்பதி சுரேஷ் - செல்வி. இவர்களது மகன் ராயல், மகள் விரேஸ்மா. விவசாய குடும்பத்தை சேர்ந்த ராயல் தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றை வளர்த்து வந்திருக்கிறார். இவற்றின் மீது விரேஸ்மா மிகுந்த பாசத்தையும் கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில், விரேஸ்மாவுக்கு திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவெடுத்திருக்கின்றனர்.

Brother Surprise Gift to Newly Wed sister in Manamadurai

அதன்படி, அவருக்கும் உள்ளூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஆசையுடன் வளர்த்து வந்த கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளை பிரிந்து செல்ல இருப்பதை அறிந்து விரேஸ்மா கவலையடைந்தார்.

இதனையறிந்த அவரது சகோதரர் ராயல், திருமணத்தன்று ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகியவற்றை மணமகள் விரேஸ்மாவுக்கு அன்புப் பரிசாக அளித்திருக்கிறார். இதனை கண்ட அனைவரும் நெகிழ்ச்சியடைந்து போயினர். இதுபற்றி பேசிய மணமகள் விரேஸ்மா,"எத்தனை கோடி கொடுத்தாலும் இதுபோன்ற ஒரு சீர்வரிசை கிடைக்காது. பாசத்துடன் வளர்த்த செல்ல பிராணிகளை விட்டு பிரிகிறோமே? என கவலை இருந்தது. இப்போது நான் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்" என்றார்.

Brother Surprise Gift to Newly Wed sister in Manamadurai

தனது தங்கையின் ஆசையை நிறைவேற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார் விரேஸ்மாவின் சகோதரர் ராயல். மணமேடையில் ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, கன்னி நாய்கள், சண்டை சேவல் ஆகிவற்றை சகோதரர் தனது தங்கைக்கு திருமண பரிசாக அளித்த செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | காதலனுக்கு ஜூஸில் விஷம்?.. கைதான இளம்பெண் கோர்ட்டில் சொன்ன விஷயம்.. குழம்பிப்போன போலீஸ்.. திடீர் திருப்பம்..!

BROTHER, SISTER, NEWLY WED SISTER, SURPRISE, GIFT, MANAMADURAI

மற்ற செய்திகள்