கன்னியாகுமரி அருகே கல்யாணத்துக்கு முன் ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. உடனே மணமகன் வீட்டார் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணத்திற்கு முன் மணப்பெண் காதலனுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே கல்யாணத்துக்கு முன் ‘ஷாக்’ கொடுத்த மணப்பெண்.. உடனே மணமகன் வீட்டார் எடுத்த ‘அதிரடி’ முடிவு..!

Also Read | மாப்பிள்ளை இல்லாமல் கல்யாணமா..? இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இந்தியாவுல இப்படி ஒரு திருமணமா.?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பூக்கடை பகுதியை சேர்ந்த நர்சிங் படித்த இளம் பெண்ணுக்கும், குளச்சல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் வீட்டில் இருந்த மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மணப்பெண்ணும், பூக்கடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. காதலனுடன் சென்ற மணப்பெண் அவரை திருமணம் செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Bride runs away with boyfriend before marriage in Kanyakumari

இதைக் கேட்டு மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் இப்படி ஆகிவிட்டதே என சோகத்தில் மூழ்கினர். இந்த நிலையில், குறிப்பிட்ட அதே நாளில் மணமகனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து மணமுடித்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாளான நேற்று உறவுக்கார பெண்ணுடன் மணமகனுக்கு திருமணம் நடந்தது. மணப்பெண் காதலனுடன் ஓடிப்போன நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் மணமகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் அவரது பெற்றோர் சோகத்தில் கண்ணீர் வடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "கங்குலி Resign பண்றாரா??.." ஒரே ஒரு ட்வீட்டால் எழுந்த குழப்பம்.. கடைசியில் அவரே கொடுத்த விளக்கம்

KANYAKUMARI, BRIDE, BOYFRIEND, MARRIAGE, கன்னியாகுமரி, மணப்பெண், மணமகன்

மற்ற செய்திகள்