வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்!.. "மனிதர்களுக்கு பரவலாம்!".. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து!.. தமிழகத்தின் நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் மனிதருக்கும் பரவலாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்!.. "மனிதர்களுக்கு பரவலாம்!".. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு கருத்து!.. தமிழகத்தின் நிலை என்ன?

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேரளாவில் பரவியுள்ள பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது. 

தமிழகத்தில் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் இதுவரை 4 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

மற்ற செய்திகள்