Darbar USA

VIDEO: ‘முகத்தில் துணி’!.. 'நைசாக வந்த மர்ம நபர்'.. அடுத்தடுத்து நடந்த கொள்ளை..! பரபரப்பை கிளப்பிய சிசிடிவி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இருசக்கர வாகனங்களை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: ‘முகத்தில் துணி’!.. 'நைசாக வந்த மர்ம நபர்'.. அடுத்தடுத்து நடந்த கொள்ளை..! பரபரப்பை கிளப்பிய சிசிடிவி வீடியோ..!

வேலூரில் இருசக்கர வாகனங்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், முதலில் சென்ற நபரின் முகம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து வந்த நபர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

அடுத்த சில தினங்களில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த ஆட்கள் வெளியே வந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.  இந்நிலையில் சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் பைக் கொள்ளையில் ஈடுப்பட்ட வந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் கொள்ளை முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

CCTV, THEFT, VELLORE