"நான் அவுட்டானது பிரச்சனை இல்ல, அசிம் வெளிய வந்திருந்தா எனக்கு செருப்படி தான்".. பிரபல போட்டியாளரின் அப்பா சொன்ன விஷயம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் அசிம் டைட்டில் வின்னராக தேர்வாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

"நான் அவுட்டானது பிரச்சனை இல்ல, அசிம் வெளிய வந்திருந்தா எனக்கு செருப்படி தான்".. பிரபல போட்டியாளரின் அப்பா சொன்ன விஷயம்!!

                                    Image Credit : Vijay Television

Also Read | ஒரே ஒரு டெஸ்ட் மேட்ச் பேருல.. ஆஸ்திரேலிய ஜாம்பவானிடமே சவால் விட்ட தினேஷ் கார்த்திக்.. ஜெயிப்பாரா? மாட்டாரா?

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அப்போது அவருடன் பிக் வீட்டில் சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

பிக் பாஸ் குறித்து பலர் தெரியாத விஷயங்கள் பற்றியும், சக போட்டியாளர்கள் பற்றியும், விமர்சனங்களை சந்தித்து பற்றியும் என அனைவரும் ஏராளமான கருத்துக்களை பேசி இருந்தனர். அந்த சமயத்தில், அசிம் வெற்றி பெற்றது எப்படி இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

Bigg boss contestant father about azeem as winner

Image Credit : Vijay Television

அசிம் டைட்டில் வின்னர் ஆனது பற்றி பேசி இருந்த அசல் கோலார், அங்கே இருந்த பிக் பாஸ் டைட்டில் கோப்பையை சுட்டிக்காட்டி, "இது யாரோடது அவரோடதுன்னு (அசிம்) நினைச்சுட்டு இருக்கீங்களா?. நான் இப்ப நினைச்சா கூட வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுவேன். நான் ஜெயிச்சா என் வீட்ல எந்த மாதிரி ஃபீல் ஆவாங்களோ அந்த மாதிரி அசிம் ஜெயிச்சதுக்கு ஃபீல் ஆனாங்க.

Bigg boss contestant father about azeem as winner

நான் மூன்றாவது வாரம் வெளியே வந்துட்டேன்னு நினைக்கிறேன். அப்ப என்னோட அப்பா ஒரு வார்த்தை சொன்னாரு. 'நீ வந்துட்ட ஓகே எனக்கு அது ஒன்னும் பிரச்சனை கிடையாது. அசிம் வெளிய வந்திருந்தா உன்ன செருப்பால அடிச்சி இருப்பேன். ஏன்னா அவருக்கு நான் வெளியே வந்தது பிரச்சனை இல்லை. அசிம் Save ஆயிட்டு உள்ள இருக்கறது தான் அவருக்கு சந்தோசம். அசிம் வெளியே வந்து இருந்தா நான் காலி. அவருக்கு நான் உள்ள விளையாடுனத விட அசிம் உள்ள விளையாண்டது ரொம்ப புடிச்சிருந்துச்சு" என தெரிவித்தார்.

Also Read | "எங்க இலைக்கு ஏன் பன்னீர் வைக்கல".. தகராறில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டினர்..? கல்யாண வீட்டில் நடந்த சோகம்..!

BIGG BOSS CONTESTANT, AZEEM, ASAL KOLAAR, MANIKANTA

மற்ற செய்திகள்