சீரியலில் அழுத நடிகை.. நிஜமென நினைத்து, கண்ணீர் துடைத்து முத்தமிட்ட குழந்தை.! Baakiyalakshmi

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார். கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார்.

சீரியலில் அழுத நடிகை.. நிஜமென நினைத்து, கண்ணீர் துடைத்து முத்தமிட்ட குழந்தை.! Baakiyalakshmi

                                         Image Credit : Vijay Television

Also Read | Kadhal Conditions Apply : "சினிமால பணம் பார்க்கவே இல்ல.. ஆனா மகாலட்சுமி வந்த நேரம்.. ".. LIBRA ரவீந்தர் EXCLUSIVE

இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இதனிடையே கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற பாடுபடுகிறார் பாக்கியலட்சுமி. அதன் ஒரு பகுதியாக மீண்டும் சமைத்து டேக் அவே உணவு பொருள் கடையை வீட்டிலேயே பல எதிர்ப்புகளை மீறி நடத்துகிறார்.

இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வரும் எழில் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக கோபியிடம் இருந்து வீட்டை பணம் கொடுத்து வாங்கி பாக்கியாவிடம் கொடுக்க முற்படுகிறார். அதற்கு தான் எடுக்க போகும் சினிமாவை நம்பி இருந்தார். ஆனால் எழிலின் தயாரிப்பாளரின் மகள் எழில் மீது ஆசைப்பட, எழிலோ, தான் காதலிக்கும் அமிர்தாவையே திருமணம் செய்யவுள்ளதாக கூறுகிறார். இதனால் அவரது பட  தயாரிப்பாளர் கோபப்பட, படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து எழிலின் பாட்டியும் அண்ணனும் அமிர்தாவை விட்டுவிட்டு, தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியை கல்யாணம் பண்ணச் சொல்லி வற்புறுத்தியதுடன், அந்த தயாரிப்பாளரிடம் எழிலை வர்ஷினிக்கே கல்யாணம் பண்ணி தருவதாக சொல்லி வாக்கு கொடுத்துவிட்டு வீட்டை கோபியிடம் இருந்து வாங்குவதற்கான பணத்தையும் வாங்கிக்கொண்டுவந்துவிட்டனர். இந்த அழுத்தம் தாங்காமல், வீட்டில் இருக்கும் அனைவருக்காகவும், எழில் அமிர்தாவிடம் சென்று காதலை பிரேக் அப் பண்ணிவிட்டார். இதன் தொடர்ச்சியாக எழிலுக்கு வர்ஷினியுடன் திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால் தன் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாகவே எழில் இந்த திருமணத்தை பண்ணவிருக்கிறார்.

Baakiyalakshmi baby wipe up artist tears viral

இந்நிலையில் எழிலுக்கு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ஏதோ பிரச்சனை என நினைத்து அங்கு கைக்குழந்தையுடன் வரும் அமிர்தா, அவருக்கு திருமணம் தெரிந்து அதிர்ச்சி அடைந்து உடைந்து அழுகிறார்.

நிலைமையை எடுத்துச் சொல்லி அவரிடம் மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார் எழில். அப்போது மனமுடைந்து அழுத அமிர்தாவின் கண்களை அவர் கையில் இருந்த குழந்தை எதார்த்தமாக துடைத்துவிட்டு முத்தம் கொடுக்கிறது. இந்த காட்சி சீரியலில் இடம் பெற்று வைரலானது.‌ இதைத் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அமிர்தா கேரக்டரில் நடிக்கும் ரித்திகா தமிழ் செல்வி, தன் கையில் இருந்த அந்த குழந்தை,  நிஜமாகவே தான் அழுவதாக நினைத்துக்கொண்டு தன் கண்ணீரை துடைத்து முத்தமிடுவதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

Also Read | கட்டாயத் திருமணம் அமிர்தாவிடம் கதறிய எழில்.. சூழ்ச்சி அறிந்து கொந்தளித்த பாக்யா.. Baakiyalakshmi

BAAKIYALAKSHMI PROMO, BAAKIYALAKSHMI SERIAL, BAAKIYALAKSHMI TODAY EPISODE, BAAKIYALAKSHMI NEW PROMO

மற்ற செய்திகள்