"எச்சிலை காரி துப்பி குடுப்பேன்.. சாப்டுவீங்களா..?".. வார்த்தைய விட்ட படைத்தளபதி அசீம் .. “ஹலோ.. நாகரீகமா பேசுங்க” கொதித்த ராஜகுரு விக்ரம்..! பற்றி எரியும் அரண்மனை டாஸ்க்.. bigg boss 6 tamil

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

"எச்சிலை காரி துப்பி குடுப்பேன்.. சாப்டுவீங்களா..?".. வார்த்தைய விட்ட படைத்தளபதி அசீம் .. “ஹலோ.. நாகரீகமா பேசுங்க” கொதித்த ராஜகுரு விக்ரம்..! பற்றி எரியும் அரண்மனை டாஸ்க்.. bigg boss 6 tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.

இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக  மைனா பங்கேற்றுள்ளார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ராஜா - ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப்போட்டுவிட்டதாக பணியாளர்கள் மீது ரச்சிதா கோபம் கொண்டு சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் இதுகுறித்த விசாரணையில் ராஜகுருவான விக்ரமன், ராணியான ரச்சிதா ஈடுபட்டனர். இதில் அசீம் படைத்தளபதியாக, ராணியின் உணவில் உப்பு வராமல் தடுத்திருக்க வேண்டும், அது அவர் பொறுப்பு என்றும் விக்ரமன் குற்றச்சாட்டை வைக்க, அதற்கு அசீமோ, உப்பை போட்டது தான் அல்ல என்று வாதிட்டார். ஆனால் ஷிவினோ, சமையல் டீமில் இருந்து படைத்தளபதியை பரிசோதிக்கவே அப்படி செய்ததாகவும் கூறினார். இதனிடையே உப்பை அள்ளிப்போட்டது தான் தான் என கதிரவன் கூற, ஷிவின் அதை மறுக்க, கடைசிவரை உப்பை போட்டது யாரென பெரிய வாதமே நடந்தது. கடைசியில் விசாரணை செய்ய ஷிவின் ஒப்புக்கொள்கிறார்.

இதனிடையே சேவகர்கள், பணியாளர்கள் என அனைவரும் நிற்க, இதில் ஏடிகே அந்தந்த உணவில் இருந்து உணவு உண்டு பார்த்து டெஸ்ட் பண்ணிவிட்டு படைத்தளபதி கொடுக்கலாம் என யோசனை சொல்ல, அசீமோ, படைத்தளபதி உண்ட எச்சில் உணவை ராணிக்கோ மற்ற அரசவையினருக்கோ கொடுக்க முடியுமா? இது ராஜகுரு விக்ரமனுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர் முடிவெடுக்கிறார். உண்மையில் முடிவெடுக்கும் அதிகாரம் ராணிக்கோ, ராஜாவுக்கோதான் உள்ளது என அசீம் கூறினார். மேலும் பேசியவர் தான் எச்சில் உமிழ்ந்து தருவதை உண்ணுங்கள் என விக்ரமனிடம் கூற, விக்ரமன் கொதித்ததுடன், நாகரீகமாக பேசுங்கள் அசீம், இந்த பிக்பாஸ் வீட்டில் எல்லா அதிகாரமும் உங்களுக்கு கொடுத்திருங்களா என சொல்லி சண்டை இடுகிறார்.

அப்போது அசீம், “ஆமா.. டேஸ்ட் பண்ணிவிட்டு அரசவையினருக்கு படைத்தளபதி ஆகிய நான் உணவு கொடுக்க வேண்டும் என்றால் காரி எச்சில் உமிழ்ந்து தான் கொடுப்பேன்.. சாப்பிடுவீங்களா?” என கேட்க, அதன் பிறகு அசீம்-விக்ரமன் சண்டை பிக்பாஸ் வீட்டில் அனல்பறக்க நடந்தது.

இடையில் செந்தமிழ் எல்லாம் காணாமலும் போனது. அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Also Read | அரண்மணையான பிக்பாஸ் வீடு.! ராஜா ராணியாக ராபர்ட் - ரச்சிதா.. ட்ரெண்ட் ஆகும் பாகுபலி போஸ்.!

BIGG BOSS 6, BIGG BOSS 6 TAMIL

மற்ற செய்திகள்