‘கல்யாணம் ஆன பொண்ணுக்கூட காண்டேக்ட்...' ‘ஏற்கனவே வார்னிங் கொடுத்தேன், கேட்கல...’ பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி அருகே பெண்ணுடன் இருக்கும் தொடர்பினால் ஏற்பட்ட பிரச்சனையில் பெட்டிக்கடைக்காரர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கல்யாணம் ஆன பொண்ணுக்கூட காண்டேக்ட்...' ‘ஏற்கனவே வார்னிங் கொடுத்தேன், கேட்கல...’ பரபரப்பு சம்பவம்...!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த அழகையா என்பவரது மகன் அழகுராஜன்(40). இவருக்கு திருமணமாகி பிச்சைக்கனி என்ற மனைவியும், அகிலேஷ், அஜய் என்ற 2 மகன்களும் உள்னர். இவர் அங்கு பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் இவர் அருகில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது வழக்கம்.

இன்று வழக்கம் போல அழகுராஜன் கழுகுமலை பஜாரில் பொருள்களை வாங்கி விட்டு, ஊருக்கு தனது டூ விலரில் கிளம்பிய போது, தீடீரென மர்ம நபர் ஒருவர், அழகுராஜனை தாக்கி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கழுகுமலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து அழகுராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கழுகுமலை கரட்டுமலையை சேர்ந்த மகேந்திரன் (27) என்பவர் கழுகுமலை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் மகேந்திரனுக்கும், ஆலங்குளத்தினை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட, அந்த கிராமத்தினை சேர்ந்தவர்கள் மகேந்திரனை அழைத்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்தாலும் மகேந்திரன் அந்த பெண் உடனான பழக்கத்தினை கைவிடல்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட அழகுராஜன், மகேந்திரனை பார்த்து எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதனால் பெண்ணுடன் இருக்கும் தொடர்புக்கு எதிரியாக இருக்கும் அழகுராஜனை ஆத்திரத்தில் கொலை செய்ததாக மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்தின் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ILLEGALRELATIONSHIP