‘நாங்க வாழ்க்கையில முன்னேர அவங்கதான் காரணம்’.. தேடிக் கண்டுபிடித்து கௌரவம்.. சென்னை அருகே நடந்த நெகிழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தங்கள் வாழ்க்கை முன்னேற வழிகாட்டியாக இருந்த முன்னாள் ஆசிரியையை தேடிக் கண்டுபிடித்து முன்னாள் மாணவர்கள் கௌரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘நாங்க வாழ்க்கையில முன்னேர அவங்கதான் காரணம்’.. தேடிக் கண்டுபிடித்து கௌரவம்.. சென்னை அருகே நடந்த நெகிழ்ச்சி..!

நாடு முழுவதும் 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சற்று வித்தியாசமாக குடியரசு தினத்தை கொண்டாடினார்கள்.

Alumni students honor school teachers in Thiruverkadu

கடந்த 1994-ம் ஆண்டு இப்பள்ளியில் படித்த மாணவர்கள், தங்களுக்கு பாடம் எடுத்த பள்ளி ஆசிரியைகளை தேடிக் கண்டுபிடித்து தாங்கள் பயின்ற பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். அப்போது பலத்த கரவொலியுடன் அவர்களை மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

Alumni students honor school teachers in Thiruverkadu

மேலும் முன்னாள் மாணவர்களின் சார்பில் இரண்டு பீரோக்களை முன்னாள் ஆசிரியர் மூலமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்கள். தங்களது வாழ்க்கை முன்னேற பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் என்பதை தற்போதைய மாணவர்கள் உணர வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக முன்னாள் மாணவர்கள் சந்தோஷமாக தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்