அடையார் ஆனந்த பவன் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா துயர் துடைப்பு பணிகளுக்காக அடையார் ஆனந்த பவன் சார்பில் ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

அடையார் ஆனந்த பவன் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி !

இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினிடம், கொரோனா துயர் துடைப்பு நிதியாக, அடையார் ஆனந்த பவன் மற்றும் ‘‘ஏ2பி’’ உணவக நிறுவனங்களின் சார்பில் ரூ. 50 லட்சம், தமிழ்நாடு ஓட்டல்கள் அசோசியேஷன் சார்பில் ரூ. 10 லட்சம் என மொத்தம் ரூ. 60 லட்சத்திற்கான காசோலையை அதன் நிறுவன இயக்குனர்கள் திரு. கே.டி. வெங்கடேச ராஜா, திரு. கே.டி. ஸ்ரீனிவாச ராஜா திரு. டி. வெங்கடேச ராஜாவின் புதல்வர் திரு. வி. விஷ்ணு ஷங்கர் ஆகியோர் வழங்கினர்.

மற்ற செய்திகள்