Thalaivi Other pages success

"துப்பிருந்தா நீ போய் கேளு...' 'டிவிட்டர டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்க..." - 'கோவத்தில்' கொந்தளித்த 'நடிகர்' சித்தார்த்...! - என்ன நடந்தது...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நீட் தேர்வு இன்று (12-09-2021) நடைபெற்ற நிலையில், டிவிட்டரில் நடிகர் சித்தார்த்தை சீண்டிய நபரை அவர் வெளுத்து வாங்கியுள்ளார்.

"துப்பிருந்தா நீ போய் கேளு...' 'டிவிட்டர டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்க..." - 'கோவத்தில்' கொந்தளித்த 'நடிகர்' சித்தார்த்...! - என்ன நடந்தது...?

நடிகர் சித்தார்த் பெரும்பாலும் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து தன்னுடைய கருத்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்துபவர். இந்நிலையில் இன்று நடைபெற்ற நீட் தேர்வு குறித்து சித்தார்த்தை சீண்டிய நபரை அவர் வெளுத்து வாங்கியுள்ளார்.

ட்விட்டரில் ஒரு நபர் சித்தார்த் கூறியதாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில்,

"நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் - தேர்தல் வாக்குறுதி

இன்று நீட் நடக்கிறது.

பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் - நடிகர் சித்தார்த்"

ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க?

#நீட் ரத்து எங்கடா'

என நடிகர் சித்தார்த் அவர்களை டேக் செய்து அந்த நபர் ட்வீட் செய்துள்ளார்.

இதனை ரீட்வீட் செய்த நடிகர் சித்தார்த் பதிலுக்கு,

'மூதேவி, கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்லை உங்க அப்பன போய் கேளு,

நான் என் வேலைய தாண்டா பாக்குறேன்,

பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு,

டிவிட்டர டாய்லெட்டாக்கி வச்சிருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையில் தான் மலரும், எழவு.

இந்தியில சொல்லட்டா?' என கடுங்கோபத்துடன் கொந்தளித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்