Mayilsamy : "அன்னைக்கு நைட் எனக்கு அட்டாக் வந்துச்சு.. பிறந்த நாள், திருமண நாள் தெரியும்.‌ இறப்பு நாள் மட்டும் யாருக்கும் தெரியாது.!" - இறப்புக்கு முன்‌ பேசிய மயில்சாமி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.

Mayilsamy : "அன்னைக்கு நைட் எனக்கு அட்டாக் வந்துச்சு.. பிறந்த நாள், திருமண நாள் தெரியும்.‌ இறப்பு நாள் மட்டும் யாருக்கும் தெரியாது.!" - இறப்புக்கு முன்‌ பேசிய மயில்சாமி..

                            Images are subject to © copyright to their respective owners

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார்.  2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.

மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் மயில்சாமி, நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி நிகழ்வு ஒன்றில் தன்னுடைய உடல்நிலை, தனக்கு வந்து நெஞ்சுவலி மற்றும் மரணம் அடைதல் குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இது தொடர்பான அந்த வீடியோவில் நடிகர் மயில்சாமி, "அன்று இரவு எனக்கு நெஞ்சுவலி வந்தது. என்னை போரூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மூக்கில் அந்த ஆக்சிஜன் கருவியை பொருத்தினார்கள். அதன் பிறகு சரியாகிவிட்டேன். இப்போது மீண்டு வந்து விட்டேன். யார் யாருக்கு எப்போது என்ன நடக்க வேண்டும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் நலமுடன் வந்துவிட்டேன். அதுதான் ஆண்டவன் சித்தம்.

Actor Mayilsamy on his earlier attack and life

Images are subject to © copyright to their respective owners

ஆனால் மரணம்  யாருக்கு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. நமக்கே தெரியாது. நமக்கு நம் கல்யாண நாள் தெரியும். பிறந்தநாள் தெரியும். ஆனால் இறப்பு நாள் மட்டும் தெரியவே தெரியாது. அது தெரிந்தால் அப்போ அவ்வளவு அநியாயம் நடக்கும்" என பேசி உள்ளார்.

MAYILSAMY, DEATH

மற்ற செய்திகள்