நம்ம 'பொன்னியின் செல்வன்' ஜெயம் ரவிக்கு கொரோனா உறுதி..!! உடன் இருந்தவர்களுக்கு விடுத்த வேண்டுகோள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ஜெயம் ரவி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ட்வீட் செய்திருக்கிறார். மேலும், தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்படும்பட்சத்தில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நம்ம 'பொன்னியின் செல்வன்' ஜெயம் ரவிக்கு கொரோனா உறுதி..!! உடன் இருந்தவர்களுக்கு விடுத்த வேண்டுகோள்..!

ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆனார் ரவி. அதனை தொடர்ந்து  எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல், தனி ஒருவன் ஆகிய படங்கள் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ஜெயம் ரவி. கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் பாகம் -1 ல் அருண்மொழிவர்மன் கதாப்பாத்திரத்தில் ரவி நடித்திருந்தார். இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. லைகா நிறுவனம் தயாரித்து வெளிவந்த இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், நேற்று தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கிறார் ஜெயம் ரவி. மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்படும் பட்சத்தில் தங்களை பரிசோதனை செய்து கொள்ளும்படியும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அனைவரும் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்கும்படியும் அவர் அந்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் ஜெயம் ரவி,"எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக கவசம் அணிந்து பாதுகாப்பக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், அவர் விரைந்து நலமடைய திரைத் துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

JEYAM RAVI, COVID19, POSITIVE

மற்ற செய்திகள்