Kadaisi Vivasayi Others

"மறுநாள் கல்யாணம்".. கேரளாவில் இருந்து வந்து ஊட்டி மணமகன் வீட்டுக்குள் புகுந்த காரால் விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உதகை, 09 பிப்ரவரி 2022:- ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் வந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டினுள் புகுந்து விபத்து மணமகன் சகோதரி காயம் அடைந்துள்ளார்.

"மறுநாள் கல்யாணம்".. கேரளாவில் இருந்து வந்து ஊட்டி மணமகன் வீட்டுக்குள் புகுந்த காரால் விபரீதம்!

மணமகன் சகோதரி காயம்

கூடலூர்- ஊட்டி சாலையில் டீ.ஆர் பஜார் பகுதியில் கேரள சுற்றுலாப்பயணிகள் வந்துகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் திருமணம் நடைபெறவிருந்த வீட்டிற்குள் கார் புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் மணமகன் சகோதரி காயம் அடைந்துள்ளார்.

Also Read: திரைத்துறையில் ட்ரெண்ட் ஆகும் மதுரை அன்புச் செழியனின் இல்லத்திருமண செய்தி.. Viral ஆகும் மணமக்களின் ஃபோட்டோ

திடீரென கார் புகுந்து விபத்து

ஆம், திருமணத்துக்கு தயாராக இருந்த வீட்டின் உள்ளே திடீரென கார் புகுந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் வந்தவர்களும் ஒரு குடும்பத்தினர் தான். அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். கேரள மாநிலம் தலைச்சேரி பகுதியில் இருந்து வந்த அந்த குடும்பத்தினர் வந்த கார்தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

accidentally car hits into marriage house ooty விபத்து

சுற்றுலா வந்த கேரள குடும்பம்

கேரள பகுதியில் இருந்து குடும்பத்துடன் தங்களது இன்னோவா கார் ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலாவுக்காக அவர்கள் வந்துள்ளனர். சுற்றுலாவுக்காக வந்தவர்கள் மீண்டும் கேரளாவை நோக்கி, தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக திரும்பியுள்ளனர். அதற்கென சாலை மார்க்கமாக அந்த குடும்பத்தினர் தங்களது காரில் திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்

accidentally car hits into marriage house ooty விபத்து

ஆனால், வந்தவர்கள் வரும் வழியில் இருந்த, டீஆர் பஜார் பகுதியில் காரை இயக்கிக்கொண்டு வந்தபோது தான் கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளதை உணர்ந்துள்ளனர். அந்த நொடி தான் காரும் கட்டுப்பாட்டை இழந்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. ஆனால் காரை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முன்னே இந்த விபத்து சம்பவம் அரங்கேறிவிட்டது. அதன்படி, டீ.ஆர் பஜாரில் வசிக்கும் சத்தியசீலன் என்பவரது வீட்டினுள் கார் புகுந்துள்ளது.

களையிழந்த கல்யாண வீடு

இதில், சத்தியசீலன் மகள் ஷாலினி, வயது 19 காயமடைந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரை ஒட்டி வந்த ஓட்டுனர் ஸ்ரீநாத்தும் லேசான காயமடைந்துள்ளார். சத்தியசீலனின் மகன் பிரின்சுக்கு மறுநாள் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இப்படி விபத்து ஏற்பட்டது, கலகலப்பாக இருக்க வேண்டிய கல்யாண வீட்டினரிடையே சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடிகை குஷ்பூ முஸ்லீமா? வைரல் ஆகும் உண்மையான பெயர் மற்றும் ஹிஜாப் தொடர்பான கருத்துக்கள்!

மற்ற செய்திகள்