அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து வந்த 7 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அசுர வேகத்தில் வந்த ‘7 வாகனங்கள்’.. ‘நொடியில்’ நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி..

புதுக்கோட்டை அருகில் உள்ள நார்த்தமலையில் அடுத்தடுத்து வந்த கார்கள், வேன்கள் என 7 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதிக் கொண்டுள்ளன. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி செல்வராஜ் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பும் பணியில் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

PUDUKKOTTAI, ROAD, ACCIDENT, 7VEHICLE, COLLISION