'மர அறுவை' இயந்திரத்தில் சிக்கி... துண்டான 'கர்ப்பிணி' பெண்ணின் 'தலை'... மனதை 'நடுங்க' செய்யும் 'கோரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி பெயர் கல்பனா. கல்பனா கர்ப்பிணியாக உள்ளார். தர்மராஜ் அப்பகுதியில் மர அறுவை ஆலை ஒன்றை நடத்தி வருகிறார்.

'மர அறுவை' இயந்திரத்தில் சிக்கி... துண்டான 'கர்ப்பிணி' பெண்ணின் 'தலை'... மனதை 'நடுங்க' செய்யும் 'கோரம்'!

இந்நிலையில், ஊரடங்கு முறையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தர்மராஜின் மர அறுவை ஆலை மீண்டும் செயல்பட தொடங்கியது. கல்பனா அவ்வப்போது கணவரின் ஆலைக்கு சென்று சில உதவிகளையும் செய்து வந்துள்ளார். அதே போல இன்று ஆலையிலுள்ள தனது கணவருக்கு வழக்கம் போல டீ கொடுக்க சென்றுள்ளார். அப்போது தர்மராஜ் ஆலையில் இல்லை என்று தெரிகிறது.

எதிர்பாராதவிதமாக, ஆலையில் ஓடிக் கொண்டிருந்த மர அறுவை இயந்திரத்தில் கல்பனாவின் துப்பட்டா சிக்கிக் கொண்டுள்ளது. அதை எடுக்க கல்பனா முற்பட, அவரின் தலை சிக்கி துண்டாகியுள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன அங்கிருந்த பணியாளர்கள் இந்த சம்பவம் குறித்து கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இயந்திரம் பாதுகாப்பில்லாமல் திறந்து வைத்ததே கர்ப்பிணி உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

மர அறுவை இயந்திரத்தில் சிக்கியதால் கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அப்பெண்ணின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியதுடன் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்