'என்ன மாட்டிவிட்டுடான்'.. 'அதான் தனியே அழச்சுட்டு போய்'.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காஞ்சிபுரத்தில் முன்விரோதம் காரணமாக, சிறுவன் ஒருவன் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அச்சிறுவன் கைது செய்யப்பட்டான்.

'என்ன மாட்டிவிட்டுடான்'.. 'அதான் தனியே அழச்சுட்டு போய்'.. 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

காஞ்சிபுரம் மாவட்டம் வண்மேடு கிராமத்தில், ஜேசிபி இயந்திரம் ஓட்டுபவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் சூர்யா. இச்சிறுவன், திடீரென நேற்று குட்டை ஒன்றின் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அவனை மீட்கும்போது அவனது உடலில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்துள்ளன.

முன்னதாக விடுமுறை அதுவுமாக நேற்று விளையாடச் சென்றபோது சூர்யாவுக்கு இவ்வாறு நடந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியதை அடுத்து, சூர்யாவின் பக்கத்துவீட்டு சிறுவனை போலீஸார் கைது செய்து விசாரித்துள்ளனர். அந்த சிறுவன் இன்னொரு ஜேசிபி ஓட்டுநரிடம் உதவியாளராக இருந்து வருவதாகவும், தனது உரிமையாரின் ஜேசிபியை இந்த சிறுவன், அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து இயக்கியுள்ளான்.

இதனைப் பற்றி அந்த ஓட்டுநரிடம் சூர்யா, போன் செய்து தகவல் கூறியுள்ளான். இதனால் அந்த ஓட்டுநர் சூர்யாவின் பக்கத்து வீட்டு சிறுவனை (தனது உதவியாளரான இருக்கும் சிறுவனை) அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட இந்த சிறுவன், சூர்யாவை தனியே அழைத்துச் சென்று கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MINOR BOY, MURDER, KANCHIPURAM