'எனக்கும் கொரோனா பாஸிடிவ்னு கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க...' 'சச்சினை தொடர்ந்து அடுத்த வீரர்...' - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரரான சச்சினை தொடர்ந்து மற்றொரு வீரருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவ கிரிக்கெட் உலகில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'எனக்கும் கொரோனா பாஸிடிவ்னு கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க...' 'சச்சினை தொடர்ந்து அடுத்த வீரர்...' - அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்...!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கபட்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் உள்ளது.

                          Yusuf Pathan has been diagnosed with corona infection

தற்போது கொரோனா தொற்று குறைத்து வருகிறேன் நேரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி கொண்டிருக்கையில் பொழுதுபோக்கு விளையாட்டுகளான கிரிக்கெட் தொடர்களும் பல கட்டுப்பாடுக்களுடனும், விதிமுறைகளுடனும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள யூசுப் பதான், 'எனக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தற்போது நான், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதோடு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொண்டு வருகிறேன்.

                                            Yusuf Pathan has been diagnosed with corona infection

மேலும், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாகவே விரைவில் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்' என பதான் பதிவிட்டுள்ளார்.

                                                 Yusuf Pathan has been diagnosed with corona infection

இதற்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்