'டெஸ்ட் கிரிக்கெட்ல 'இவர்' தான் நம்பர் 1'... பும்ராவை ஓரங்கட்டி... புது கணக்கு போட்ட அஜித் அகர்கர்!.. WTC Final-ல் எதிரொலிக்குமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் பவுலர் யார் என்று முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

'டெஸ்ட் கிரிக்கெட்ல 'இவர்' தான் நம்பர் 1'... பும்ராவை ஓரங்கட்டி... புது கணக்கு போட்ட அஜித் அகர்கர்!.. WTC Final-ல் எதிரொலிக்குமா?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாத்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடக்கிறது. இதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பயோ பபுள் விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் முன்னிலையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் சிறந்த பந்துவீச்சாளர் யார் என்பதையும், அதற்கான காரணங்களையும் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் விளக்கியுள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அஜித் அகர்கர், "இந்திய டெஸ்ட் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர், வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. பும்ரா வேகமாக வளர்ந்து வந்தாலும் என்னைப் பொறுத்தவரை முகமது ஷமிதான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளர். உலகின் எந்தவொரு நாட்டிலும் விக்கெட் எடுக்க கூடிய ஆற்றல் படைத்தவர் ஷமி மட்டுமே" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யார் எனக் கணிப்பது கடினம். ஆனால், என்னை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார். ஏனெனில், ஏற்கெனவே இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராகவே சிறப்பாக விளையாடி இருக்கிறார், சாதித்து இருக்கிறார். இங்கிலாந்தின் சீதோஷனமும் கோலிக்கு பழக்கமானது" என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக அஜித் அகர்கர் வெளிப்படுத்திய கருத்து இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்