‘முதல் விக்கெட்டே அம்பயர் கிட்ட அட்வைஸ்’.. சர்ச்சையை ஏற்படுத்திய தாக்கூர் எடுத்த விக்கெட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வீரர் சர்துல் தாகூர் விக்கெட் எடுத்த பின் செய்த செயல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

‘முதல் விக்கெட்டே அம்பயர் கிட்ட அட்வைஸ்’.. சர்ச்சையை ஏற்படுத்திய தாக்கூர் எடுத்த விக்கெட்!

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசனின் இறுதிப்போட்டி இன்று(12.05.2019) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்டை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் எந்த அணி கோப்பையை கைப்பற்ற போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து இன்றைய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சென்னை அணி பந்துவீச்சாளருக்கு நெருக்கடியை கொடுத்தனர். இதனை அடுத்து சர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் டி காக் 29 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதில் விக்கெட் எடுத்தவுடன் சர்துல் தாக்கூர் கொண்டாடும் விதமாக டி காக் முன் விரலை காட்டினார். இதனை பார்த்து ரோஹித் சர்மா அதிர்ப்தி அடைந்தார். இதனை அடுத்து நடுவர் தாக்கூருக்கு வார்னிங் கொடுக்கும் விதமாக பேசி சென்றார்.

IPL, IPL2019, YELLOVE, SHARDULTHAKUR, CSKVMI, WHISTLEPODU