"எப்பா சாமி,.. என்னா அடி இது??..." மெர்சல் 'சம்பவம்' செய்த 'சுந்தர்'!!... "ஒரு நிமிஷம் 'ஸ்டேடியமே' ஆடி போயிருச்சு..." வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே ஆன கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

"எப்பா சாமி,.. என்னா அடி இது??..." மெர்சல் 'சம்பவம்' செய்த 'சுந்தர்'!!... "ஒரு நிமிஷம் 'ஸ்டேடியமே' ஆடி போயிருச்சு..." வைரல் 'வீடியோ'!!!

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சற்று தடுமாற்றம் கண்ட போது, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர் இணை சிறப்பாக ஆடி 123 ரன்கள் சேர்த்து அசத்தியது.

தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வாஷிங்டன் சுந்தர் 62 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இந்நிலையில், இந்த போட்டியில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் வீசிய பந்தை லாங் ஆஃப் திசையில், கண்ணை மூடிக் கொண்டே வாஷிங்டன் சுந்தர் அடித்தார். இதனைக் கண்ட போட்டியின் வர்ணனையாளர்களும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் ஒரு நிமிடம் திகைத்து போயினர். 

 

தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அனுபவம் மிக்க வீரரின் பந்தை கொஞ்சம் கூட பயமில்லாமல் துணிச்சலுடன் கண்ணை மூடிக் கொண்டு சிக்ஸர் அடித்த வாஷிங்டன் சுந்தரை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோவும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்