RRR Others USA

“சென்னையும்.. ‘தல’ தோனியும்..” சேவாக் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியதை அடுத்து வீரேந்தர் சேவாக் ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“சென்னையும்.. ‘தல’ தோனியும்..” சேவாக் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நேற்று விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. 11 தடவை பிளே ஆஃப் சுற்று வரை சென்றுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. இதனை அடுத்து 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், சிறப்பான கம்பேக் கொடுத்த சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில் திடீரென சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அணியில் ஒரு சாதாரண வீரராக தோனி தொடர்ந்து விளையாடுவார்கள் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில்,  இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்ற பிராண்ட் வளர்வதற்கு வித்திட்ட பல கதைகளில் இது முக்கியமான அம்சம். இதில் தல தோனியும், சென்னையும் முக்கியமான பங்கு வைக்கிறது. தோனியை போன்ற ஒரு கேப்டன் கிடைக்க சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதற்கு ஈடாக சென்னை அணியின் உரிமையாளர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அவர் பெற்றுள்ள அன்பு அபாரமானது’ என தோனியை புகழ்ந்து சேவாக் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்