RRR Others USA

IPL 2022 : வாவ்… செம்ம ஹேண்ட்ஸம் லுக்கில் கிங் கோலி.. RCB வெளியிட்ட வைரல் Pic!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் புதிய புகைப்படத்தை RCB அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

IPL 2022 : வாவ்… செம்ம ஹேண்ட்ஸம் லுக்கில் கிங் கோலி.. RCB வெளியிட்ட வைரல் Pic!

நடு ரோட்ல கும்ஃபூ.. "அங்க என்ன சத்தம்".. போலீசை கண்டதும் தெறித்து ஓடிய போதை ஆசாமி..!

நடப்பு ஐபிஎல் தொடர்  மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. இதற்க்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது.  இதற்காக எல்லா அணிகளும் தயாராகி வருகின்றன.

கோலியின் தலைமையில் RCB

2014 ஆம் ஆண்டு ராயல் சேலஞர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி. பல முறை ப்ளே ஆஃப்க்கு சென்ற போதும், சில முறை பைனலுக்கே சென்ற போதும் இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது.

Virat Kohli with RCB new jersey IPL 2022

டிவில்லியர்ஸின் ஓய்வும் புதிய தலைமையும்

ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவரும் கேப்டன் கோலியின் நெருங்கிய நண்பருமான டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி-க்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வந்த டிவில்லியர்ஸின் இந்த அறிவிப்பு அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனால் இப்போது அவரை அணி நிர்வாகம் அணியில் ஆலோசகராக நியமித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆர் சிபி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

கோலியின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியுள்ளார். அதுபோலவே ஐபிஎல் தொடரில் நான்கு முறைக் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார்.  37 வயதாகும் டு பிளஸ்சியின் தலைமையில் இந்த ஆண்டு ஐபில் தொடரை எதிர்கொள்கிறது RCB.

Virat Kohli with RCB new jersey IPL 2022

புது ஜெர்ஸியில் கோலி

இந்த ஆண்டு புதிய தலைமையோடு ஆர் சி பி அணி களம் இறங்குகிறது. ஐபிஎல் தொடர் நெருங்கியுள்ள நிலையில் ஆர் சி பி அணியின் வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்துவிட்டு கோலி இப்போது அணியொடு இணைந்துள்ளார். இந்நிலையில் அணியின் புதிய ஜெர்ஸியில் கோலி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அணி நிர்வாகம் ‘ராஜா (கோலி) எப்போதுமே ஆர் சி பி உடைகளில் அழகாக இருப்பார். இந்த வருடமும் அதில் மாற்றமில்லை’ எனக் கூறியுள்ளது. கோலியின் இந்த புகைப்படம் இணையத்தில் இப்போது வைரலாக பரவி வருகிறது.

தண்டவாளத்துல பாறைய வச்சு.. ரயிலயே கவிழ்க்க திட்டம்.. இளைஞர் போட்ட பலே பிளான்..

CRICKET, IPL, RCB, VIRAT KOHLI, RCB NEW JERSEY, IPL 2022, ஐபிஎல் தொடர், ஆர் சி பி அணி, விராட் கோலி

மற்ற செய்திகள்