'ரொம்ப நாளாவே வெயிட்டிங்ல இருக்கோம்...' 'ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிப்பாரா கோலி...' - பட்டைய கெளப்புவாரா என வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கவேண்டும் என அவரின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

'ரொம்ப நாளாவே வெயிட்டிங்ல இருக்கோம்...' 'ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிப்பாரா கோலி...' - பட்டைய கெளப்புவாரா என வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள்...!

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ரசிகர்கள், அவர் சதம் அடிக்கவேண்டும் என வேண்டி வருகின்றனர். அதற்கு காரணம் இந்த ஒரு நாள் தொடரில் மட்டும் விராட் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்து, ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பார்.

இதற்கு முன் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்களை அடித்துள்ளார். அதேபோல் தற்போது கேப்டனாக இருக்கும் விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 41 சதங்களை அடித்து பாண்டிங்குடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

                                

அதேபோல் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது விராட் கோலி இதுவரை சொந்த மண்ணில் 19 சதங்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் கோலி ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் கேப்டனான ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து, இந்தியாவில் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்துவிடுவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மற்ற செய்திகள்