மேட்ச் நடுவே ரசிகர்கள் கத்திய "வார்த்தை".. அடுத்த நிமிஷமே சிக்னல் கொடுத்து மாத்த வெச்ச கோலி!!.. வைரல் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.

மேட்ச் நடுவே ரசிகர்கள் கத்திய "வார்த்தை".. அடுத்த நிமிஷமே சிக்னல் கொடுத்து மாத்த வெச்ச கோலி!!.. வைரல் வீடியோ!!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | மாத சம்பளம் ரூ.4 லட்சம்.. ஏகப்பட்ட சலுகைகள்.. ஆனாலும் வேலைக்கு ஆள் கிடைக்கல.. அப்படி என்னப்பா வேலை அது?

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரையும் தக்க வைத்துள்ளது. அதே வேளையில் மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி பெறும்.

இந்திய அணி சிறப்பாக செயல்படும் அதே வேளையில், அடுத்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை டெஸ்ட் போட்டி தரவரிசையில் பிடிக்கும் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 ஆவது டெஸ்ட் போட்டி, மார்ச் 1 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.

Virat kohli react after fans scream rcb in test match

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு நடுவே நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக அடி வருகிறார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று ஆரம்பமாக உள்ளது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Virat kohli react after fans scream rcb in test match

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு மத்தியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மோதிக் கொண்ட சூழலில், டெல்லி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் "RCB, RCB" என கோலியின் ஐபிஎல் அணி பெயரை சொல்லி கத்தி ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர். அப்போது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி, ஆர்சிபி என கத்துவதை நிறுத்தும்படி ரசிகர்களிடம் குறிப்பிட்டு, தன்னுடைய ஜெர்சியில் "இந்தியா" என இருப்பதை குறிப்பிட்டு அதை கத்தும்படியும் சைகையில் கூறுகிறார். அவர் அப்படி குறிப்பிட்ட அடுத்த சில கணங்களில், இந்தியா என அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்யவும் செய்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | பாத்ரூம்ல கண்ணீர் விட்டு அழுத தினேஷ் கார்த்திக்..!? KL ராகுல் பற்றி பேசும்போது உருக்கம்..

CRICKET, VIRAT KOHLI, VIRAT KOHLI REACT AFTER FANS SCREAM RCB, TEST MATCH

மற்ற செய்திகள்