"அந்த தேதி ரொம்ப ஸ்பெஷல்".. விராட் கோலி பகிர்ந்த எமோஷனல் பதிவு.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை என கடும் விமர்சனம் எழுந்து வந்தது.

"அந்த தேதி ரொம்ப ஸ்பெஷல்".. விராட் கோலி பகிர்ந்த எமோஷனல் பதிவு.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்!!

ஆனால் அவை அனைத்திற்கும் ஆசிய கோப்பையில் சதம் அடித்து பதிலடி கொடுத்திருந்த விராட் கோலி, டி20 உலக கோப்பை தொடரிலும் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்திருந்தார். ஆறு போட்டிகள் ஆடிய விராட் கோலி 296 ரன்கள் எடுத்து 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார். இதனால், தனது பேட்டிங் மீதான விமர்சனங்களையும் தவிடு பொடி ஆக்கி இருந்தார்.

டி 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வில் உள்ள விராட் கோலி, வங்காளதேச அணிக்கு எதிராக டிசம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். இதற்காக தற்போதிலிருந்தே விராட் கோலி தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், சற்று எமோஷனலாக விராட் கோலி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தையும் பெற்று வருகிறது.

virat kohli latest post about india vs pak t20 world cup game

டி 20 உலக கோப்பைத் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதி சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்திய அணி மொத்தம் ஆடி இருந்த 6 போட்டிகளில் தற்போது வரை ரசிகர்கள் பேசி வரும் போட்டி என்றால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தான்.

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா சந்தித்திருந்தது. இதில் கோலி பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட, விக்கெட்டுகள் சென்ற போதும் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு நெருக்கடியை குறைத்திருந்தார் விராட் கோலி. இதனால், இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி வரை களத்தில் இருந்த கோலி, 82 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.

virat kohli latest post about india vs pak t20 world cup game

மேலும், இந்த டி 20 உலக கோப்பை தொடரில் சிறந்த போட்டி இது தான் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர். அதே போல, ஹாரிஸ் ராஃப் வீசிய 19 ஆவது ஓவரில் வேகமாக வந்த ஷார்ட் பாலை நேராக சிக்சருக்கு அனுப்பி மைதானத்தில் இருந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் திகைக்க வைத்திருந்தார் விராட் கோலி. இப்படி பல விஷயங்கள் அந்த போட்டியில் கவனம் ஈர்த்திருந்த நிலையில், இது தொடர்பாக உருக்கமான பதிவு ஒன்றையும் விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

பேட்டிங் முடிந்து மைதானத்தில் இருந்து தான் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை பகிரந்த விராட் கோலி, "அக்டோபர் 23, 2022 எப்போதும் என் இதயத்தில் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் இப்படி ஒரு எனர்ஜியை இதற்கு முன்பு நான் உணர்ந்ததே இல்லை. எப்படி ஒரு பாக்கியம் நிறைந்த மாலை வேளை அது" என நெகிழ்ந்து போய் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

 

VIRATKOHLI, IND VS PAK

மற்ற செய்திகள்