VIDEO: ரிஷப் பந்த் அதிரடியை பார்த்துட்டு கோலி செஞ்ச செயல்.. தலைவன் எப்பவுமே தனி ரகம் தான்யா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியனின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டத்தை விராட் கோலி கொடுத்த செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ரிஷப் பந்த் அதிரடியை பார்த்துட்டு கோலி செஞ்ச செயல்.. தலைவன் எப்பவுமே தனி ரகம் தான்யா..!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது.

Virat Kohli enjoyed Rishabh Pant in 2nd ODI against SA

இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 85 ரன்களும், நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் 55 ரன்களும், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 40 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஷம்சி 2 விக்கெட்டுகளும், மார்க்கம், மகாராஜ், மாகலா மற்றும் பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Virat Kohli enjoyed Rishabh Pant in 2nd ODI against SA

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிக்சர், பவுண்டரி என விளாசி அதிரடி காட்டினார். அப்போது பெவிலியலின் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி, டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்தினார். கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும், விராட் கோலி அதே குறும்புடன் உள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இப்போட்டியில் 3-வது வீரராக களமிறங்கிய விராட் கோலி, 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாக 14 முறை விராட் கோலி டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்