'உலகமே எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்'... 'வேணா பாருங்க, இந்த 3 பேரும் பின்னி பெடல் எடுக்க போறாங்க'... மைக்கல் வாகன் போட்ட லிஸ்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்த வீரர்கள் தான் அசத்தலாக அசத்தலாக விளையாடுவார்கள் என மைக்கல் வாகன் பட்டியல் போட்டுள்ளார்.

'உலகமே எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்'... 'வேணா பாருங்க, இந்த 3 பேரும் பின்னி பெடல் எடுக்க போறாங்க'... மைக்கல் வாகன் போட்ட லிஸ்ட்!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலக அளவில் இந்த போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தப் போட்டிக்கான விதிமுறைகளையும் ஐசிசி நேற்று அறிவித்தது.

Vaughan has named the three players he thinks will make the most noise

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன், இந்த போட்டியில் ஜொலிக்க போகும் வீரர்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், ''நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் மிகச் சிறப்பாக விளையாடுவார். அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அடுத்து ரிஷப் பன்ட். அவர் இப்போது கிரிக்கெட் உலகின் நட்சத்திரமாக மின்னுகிறார். கடந்த சில மாதமாக அவரின் ஆட்டம் பிரமாதம். குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அனைவரையும் அசத்தினார் ரிஷப் பன்ட். அதேபோல நியூசிலாந்தின் பேட்ஸ்மேன் வாட்லிங்கும் மிகச் சிறப்பாக விளையாடுவார்'' என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார் வாகன்.

Vaughan has named the three players he thinks will make the most noise

இதற்கிடையே நான் குறிப்பிட்டுள்ள இந்த மூன்று வீரர்களும் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என மிகுந்த நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் மைக்கல் வாகன்.

மற்ற செய்திகள்