இத எல்லாம் எப்பவோ பண்ணிட்டாரு".. 8 வருசத்துக்கு முன்னாடியே சூர்யகுமார் அடிச்ச அடி.. வைரல் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணியை டி 20 உலக கோப்பைத் தொடரின் அரை இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை (10.11.2022) எதிர்கொள்ள உள்ளது.

இத எல்லாம் எப்பவோ பண்ணிட்டாரு".. 8 வருசத்துக்கு முன்னாடியே சூர்யகுமார் அடிச்ச அடி.. வைரல் சம்பவம்!!

Also Read | "ஜெயிக்க போறது இந்தியா!!, Finals-ல இந்தியாவுடன் மோதப் போவது இந்த நாடு தான்".. இது டிவில்லியர்ஸ் கணக்கு..! T20WorldCup22

நேரடியாக சூப்பர் 12 சுற்றிற்கு தகுதி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, முதல் இரு போட்டிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் வீழ்த்தி இருந்தது.

Suryakumar yadav sweep shot against watson in ipl 2014

இதன் காரணமாக மொத்தம் 8 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, தங்களின் பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. நடப்பு டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கோலி முதலிடத்திலும், சூர்யகுமார் மூன்றாவது இடத்திலும் உள்ளார். அதிலும், சூர்யகுமார் யாதவ், 360 டிகிரியிலும் மாறி மாறி பந்துகளை அடித்து வருகிறார்.

Suryakumar yadav sweep shot against watson in ipl 2014

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது ஆப் சைடு விலகி போய், ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் ஒன்றை அடித்திருந்தார் சூர்யகுமார். இது போல ஏராளமான வித வித ஷாட்களை நம்ப முடியாத வகையில் அடித்து பலரையும் மிரள வைத்திருந்தார். இதனால், அரை இறுதி போட்டியிலும் சூர்யகுமார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, தற்போது அடித்த ஸ்வீப் ஷாட்டை பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யகுமார் அடித்துள்ளார் என்பது குறித்த செய்தி, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Suryakumar yadav sweep shot against watson in ipl 2014

2014 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் ஷேன் வாட்சன் வீசிய பந்தை கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ் ஆப் சைடில் ஏறி போய், ஸ்வீப் ஷாட் அடித்து சிக்ஸாக மாற்றி இருந்தார்.

இன்று சூர்யகுமார் சிக்ஸை பலரும் பிரம்மிப்புடன் பார்த்து வரும் வேளையில், இதனை 8 ஆண்டுகளுக்கு முன்பே சூர்யகுமார் அடித்துள்ள விஷயம், தற்போது இன்னும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | தமிழில் பேசி பட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. வீடியோவை பார்த்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

CRICKET, T20 WORLD CUP, SURYAKUMAR YADAV, IPL 2014

மற்ற செய்திகள்