IPL2022: "இடது கையில் என்ன ஆச்சு?" - காயத்தால் திடீரென விலகிய வீரர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள், 16 புள்ளிகளுடன் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது.

IPL2022: "இடது கையில் என்ன ஆச்சு?" - காயத்தால் திடீரென விலகிய வீரர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது 55 ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், மும்பை அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் ஏதாவது ஒரு வழியில்  பிளே ஆப் சுற்று வாய்ப்பு நீடித்து வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி இருந்த மும்பை இந்தியன்ஸ், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.

Suryakumar yadav ruled out of ipl 2022 due to injury

வாய்ப்பை இழந்த 'MI'

தொடர்ந்து, இந்த முறையும் முதல் 8 போட்டிகளில் தொடர்ச்சியாகி தோல்வி அடைந்து, பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள மும்பை இந்தியன்ஸ், கடைசி இரண்டு போட்டிகளில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக, அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது. தொடர்ந்து, இன்று கொல்கத்தா அணிக்கு எதிராகவும் ஆடி வருகிறது.

விலகிய மும்பை வீரர்

இதில், டாஸ் வென்ற மும்பை அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், மும்பை அணியின் நட்சத்திர வீரர் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளது, பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஆரம்பத்தில் சில போட்டிகளில் காயம் காரணமாக விலகி இருந்த சூர்யகுமார் யாதவ், பின்னர் மும்பை அணிக்காக களமிறங்கினார்.

Suryakumar yadav ruled out of ipl 2022 due to injury

தனியாளாக போராடிய சூர்யகுமார்

மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும், தனியாளாகவும் சில போட்டிகளில் ஆடி ரன் சேர்த்திருந்தார் சூர்யகுமார். மொத்தம் 8 போட்டிகளில், 303 ரன்கள் அடித்துள்ள சூர்யகுமாருக்கு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கையில் காயம் அடைந்திருந்தது. இதனால், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி உள்ளிட்ட எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்காமல், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

Suryakumar yadav ruled out of ipl 2022 due to injury

ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு, இந்திய அணி சில கிரிக்கெட் தொடர்களில் ஆடவுள்ளது. அப்படி இருக்கும் வேளையில், சூர்யகுமார் காயம் அடைந்திருப்பதால், சர்வதேச தொடருக்கு முன் அவர் குணமடைந்து விடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

MUMBAI INDIANS, IPL 2022, SURYAKUMAR YADAV, சூர்யகுமார்

மற்ற செய்திகள்