சூரிய குமார் யாதவின் வெறித்தனமான கேட்ச்.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் எடுத்த இரண்டு கேட்ச்கள் பலரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூரிய குமார் யாதவின் வெறித்தனமான கேட்ச்.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ..!

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "நூறு வருஷம் வாழணும்னா இதை பண்ணாதீங்க".. 100 வயதை கடந்த பாட்டி கொடுத்த விநோத அட்வைஸ்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதலில் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய கிரிக்கெட் அணி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. இதற்கடுத்து இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து  டி20 போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை ருசித்தது.

Suriya kumar yadav brilliant catch makes everyone shocked

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 234 ரன்கள் குவித்திருந்தது. அபாரமாக ஆடிய சுப்மன் கில் 126 குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 12.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரையும் கைப்பற்றியது.

Suriya kumar yadav brilliant catch makes everyone shocked

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் ஹர்திக் பாண்டியாவின் முதல் ஓவரை சந்தித்தார். அப்போது சூரியகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சந்தித்த பிலிப்ஸ் அதை கட் செய்ய முயற்சித்தார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த சூரியகுமார் யாதவிடம் சென்றது.

தனது தலைக்கு மேலே பறந்த பந்தை லாபகமாக தவ்வி கேட்ச்சை பிடித்தார் சூர்ய குமார். இதனைக் கண்ட சக வீரர்கள் ஆச்சரியத்துடன் அவரை பாராட்டினர். அதேபோல அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரும் சூரியகுமார் யாதவின் முயற்சியை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | எலும்பு முறிவு.. ஒரே கையில் பேட்டிங்.. கடைசிவரை போராடிய ஹனுமா விஹாரி.. குவியும் பாராட்டுகள்.. வீடியோ..!

CRICKET, SURIYA KUMAR YADAV

மற்ற செய்திகள்