அடுத்த ‘ஐபிஎல்’ சீசன் என்ன ப்ளான்..? மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வருவீங்களா?..‘சூசகமாக’ ரெய்னா சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவது தொடர்பான கேள்விக்கு சுரேஷ் ரெய்னா சூசகமாக பதிலளித்துள்ளார்.

அடுத்த ‘ஐபிஎல்’ சீசன் என்ன ப்ளான்..? மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வருவீங்களா?..‘சூசகமாக’ ரெய்னா சொன்ன பதில்..!

ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. அதில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மொத்தமாக 14 போட்டிகளில் 6-ல் சென்னை அணி வென்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்தது. அதேபோல் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ப்ளே ஆஃப்புக்கு சென்றிருக்கலாமே என ரசிகர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

Suresh Raina hints about return to CSK in next IPL season

இவை அனைத்தையும் விட ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாட உள்ளதை உறுதி செய்ததுதான். ஓய்வு குறித்த பலரது யூகங்களுக்கும் தோனி நேற்று 'Definitely Not' என்ற ஒற்றை பதிலில் முற்றுப்புள்ளி வைத்தார்.

Suresh Raina hints about return to CSK in next IPL season

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே அவர் விலகிவிட்டார். அவர் இல்லாதது சென்னை அணிக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

Suresh Raina hints about return to CSK in next IPL season

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த ஐபிஎல் சீசன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘மஞ்சள் தான் என் வாழ்க்கை’ என சூசகமாக பதிலளித்தார். அதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ரெய்னா விளையாடுவது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்