"நல்லா இருக்கே உங்க கதை??.. ஒவ்வொரு ஆளுங்களுக்கும் ஒவ்வொரு நியாயமா??.." 'சரமாரி' கேள்விகளை எழுப்பிய 'சுனில் கவாஸ்கர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா தொற்றின் காரணமாக, இந்தியாவில் நடைபெற்றுவந்த 14வது ஐபிஎல் சீசன், தற்போது பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

"நல்லா இருக்கே உங்க கதை??.. ஒவ்வொரு ஆளுங்களுக்கும் ஒவ்வொரு நியாயமா??.." 'சரமாரி' கேள்விகளை எழுப்பிய 'சுனில் கவாஸ்கர்'!!

கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் வரை இந்த சீசனில் நடந்து முடிந்துள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த பல சீசன்களில், தொடர்ந்து பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த ஹைதராபாத் அணி, இந்த முறை படு சொதப்பலாக ஆடியிருந்தது.

மேலும், இந்த சீசனில் 6 போட்டிகள் முடிவடைந்த சமயத்தில், அணியின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, ஹைதராபாத் கேப்டன் வார்னரை அந்த அணி நிர்வாகம் நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக வில்லியம்சனை நியமித்திருந்தது. இருந்தபோதும் அந்த அணி கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில், வார்னரை ஆடும் லெவனில் கூட ஹைதராபாத் அணி களமிறக்கவில்லை.

ஐபிஎல் தொடரில் ஒரு தொடரின் பாதிக்கு நடுவே, கேப்டனை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பாக, பல சீசன்களில் அப்படி நடந்துள்ளது. ஆனால், ஹைதராபாத் அணி தொடர்ந்து பல சீசன்களில், பிளே ஆஃப் முன்னேறுவதற்கும், ஒருமுறை கோப்பையை கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்த வார்னரை, ஒரு தொடரின் பாதியில் அதன் முடிவை வைத்து, அந்த அணி நிர்வாகம் நீக்கியுள்ளது, கடும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), இது பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஹைதராபாத் அணி முன்னாள் கேப்டன் பதவியில் இருந்து வார்னரை தூக்கியது மட்டுமில்லாமல், ஆடும் லெவனில் இருந்தும் நீக்கியது. வார்னர் தற்போது ரன்களை அடித்து வந்தாலும் தனது முந்தைய காலங்களைப் போல் அதிரடியாக ஆடி ரன் குவிக்கவில்லை. ஆனால், அவர் குவிக்கும் ரன்கள் அணிக்கு தேவையாக அமைந்தது.

அப்படி இருந்தபோதும், அவரைப் போட்டியில் இருந்தும் வெளியேற்றியுள்ளது விசித்திரமாக உள்ளது. அவரை கேப்டன் பதவியிலுள்ள சரி மற்றும் தவறுகள் பற்றி, நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்தாலும் இப்போது

தோன்றும் கேள்வி என்னவென்றால், ஒரு கேப்டனை தொடரின் பாதியில் இருந்து நீக்குவது போல ஏன் ஒரு போட்டிக்கு நடுவே ஒரு அணியின் பயிற்சியாளர்களையும் அப்படி மாற்றக்கூடாது?.

கால்பந்து போட்டிகளில் ஒரு அணி தடுமாறும் போது, அந்த அணியின் மேலாளர் வரை வெளியேற்றப்படுவார்கள். ஆனால், கிரிக்கெட் போட்டிகளில் அப்படி நடைபெறுவதில்லை' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்