ரெய்னாவின் பெஸ்ட் அட்வைஸ்.. உங்களுக்கு பக்காவாக இருக்கும்.. பாருங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டுவிட்டரில் பதிவிட்ட போட்டோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

ரெய்னாவின் பெஸ்ட் அட்வைஸ்.. உங்களுக்கு பக்காவாக இருக்கும்.. பாருங்க..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, கிரிக்கெட்டில் பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றார். இதே நாளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் தனது ஓய்வை அறிவித்தார். தோனி ஓய்வு அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Starting my morning with a Yoga session: Suresh Raina

அதைப்போல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக சுரேஷ் ரெய்னா விளையாடி வந்தார். பல தொடர்களில் அரையிறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற சுரேஷ் ரெய்னா முக்கிய காரணமாக இருந்தார்.

Starting my morning with a Yoga session: Suresh Raina

இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது.

Starting my morning with a Yoga session: Suresh Raina

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி ஆகிய 4 பேரை தக்கவைத்துள்ளது. இதில் சுரேஷ் ரெய்னா தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை சிஎஸ்கே அணி தக்க வைக்கவில்லை.

இதனை அடுத்து நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் ரெய்னாவை எடுக்க சிஎஸ்கே அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா, யோகாசனம் செய்யும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘காலை யோகாசனத்துடன் தொடங்கியது. ஆன்மாவை வலிமையாக வைத்திருப்பதற்கான சிறந்த பயிற்சி இது’ என சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்