"இது கனவா.. நனவா?".. விராட் கோலியிடமிருந்து வந்த பாராட்டு.. சர்ப்ரைஸான இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது.

"இது கனவா.. நனவா?".. விராட் கோலியிடமிருந்து வந்த பாராட்டு.. சர்ப்ரைஸான இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை..!

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | குழந்தைக்கு 'இந்தியா' என பெயர் வைத்த பாகிஸ்தான் தம்பதி.. அவங்களே சொன்ன விநோத காரணம்..!

இந்த ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறி இருந்தது. இதிலிருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் அடைந்திருந்தன.

இந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இந்திய அணி சார்பில் டைடாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இதன்மூலம் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்றது. 

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில்,"U-19 உலகக் கோப்பை சாம்பியன்கள். என்ன ஒரு சிறப்பான தருணம். பெண்களே உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இந்த ட்வீட்டிற்கு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சௌமியா திவாரி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "இது கனவா? நனவா? உலகக்கோப்பைக்கு பிறகு இதைவிட சிறந்தது எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்?" என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read | பல கனவுகளோட நடந்த திருமணம்.. 3 வது நாளில் மணமகனுக்கு நேர்ந்த சோகம்.. உறைந்துபோன குடும்பத்தினர்..!

CRICKET, VIRAT KOHLI, SOUMYA TIWARI, U19 WC WIN

மற்ற செய்திகள்