Karnan usa

காயத்தால் அவதிப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. இப்போ எப்படி இருக்காரு??.. ஆபரேஷன் முடிஞ்சதும் அவரே போட்ட முதல் 'ட்வீட்'.. உருகிய நெட்டிசன்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது.

காயத்தால் அவதிப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர்.. இப்போ எப்படி இருக்காரு??.. ஆபரேஷன் முடிஞ்சதும் அவரே போட்ட முதல் 'ட்வீட்'.. உருகிய நெட்டிசன்கள்...!

இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தபின்பு அவரே முதல் ட்வீட் செய்துள்ளார். கடைசியாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்த போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்தினால் வலி மிகவும் அதிகமாகவே அவர் மீதி இருந்த 2 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை உருவானது. இதனால் மீதி இரு போட்டிகளில் இருந்தும் அவர் விலகினார்.

Shreyas Iyer underwent surgery for a shoulder injury.

தொடர்ந்து ஐபிஎல் 2021 சீசனிலும் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியானது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான அவர் இல்லாததால் தற்போது ரிஷப் பண்ட் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.

Shreyas Iyer underwent surgery for a shoulder injury.

இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆபரேஷன் முடிந்தபிறகு அவர் இட்ட பதிவில் “இது ஒரு சிறிய பின்னடைவு தான், ஆனாலும் நான் மீண்டும் ஆடுகளத்திற்கு கூடிய விரைவில் வலுவாக திரும்புவேன். உங்களது அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி!” என அவரரே ட்வீட் செய்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்