"நேத்து 'மேட்ச்' முடிஞ்சதக்கு அப்றம் 'தவான்' இப்படி தான் இருப்பாரு.." 'ஷ்ரேயாஸ்' போட்ட 'பதிவு'.. "ஒரே டீம்'ன்னு கூட பாக்காம இப்படியா அவர வச்சு செய்வீங்க??.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் போது, காயமடைந்ததன் காரணமாக, ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் வெளியேறினார்.

"நேத்து 'மேட்ச்' முடிஞ்சதக்கு அப்றம் 'தவான்' இப்படி தான் இருப்பாரு.." 'ஷ்ரேயாஸ்' போட்ட 'பதிவு'.. "ஒரே டீம்'ன்னு கூட பாக்காம இப்படியா அவர வச்சு செய்வீங்க??.."

இதனால், இந்த சீசனுக்கான டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள டெல்லி அணி, சென்னை அணிக்கு எதிராக போட்டியில் வெற்றி கண்டது. அதன் பிறகு, ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும், டெல்லி அணி தோல்வியை தழுவியிருந்தது.

இதனிடையே, டெல்லி அணி வீரர் ஷிகர் தவானை (Shikhar Dhawan) கிண்டல் செய்து, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) இன்ஸ்டாவில் போட்டுள்ள ஸ்டோரி ஒன்று, ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, கிரிக்கெட் போட்டிகளின் போது, கேட்ச் எடுக்கும் ஷிகர் தவான், உடனடியாக, தனது தொடையில் தட்டி, அதனைக் கொண்டாடும் பழக்கம் உடையவர்.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், மொத்தம் மூன்று கேட்ச்களை எடுத்த தவான், எப்பொழுதும் போல, தொடையில் தட்டி கொண்டாடினார். இதனையடுத்து, தவானின் கொண்டாட்டத்தைக் குறிப்பிட்ட ஷ்ரேயாஸ் ஐயர், போட்டிக்குப் பிறகு தவானின் தொடை இப்படி தான் இருக்கும் என்பதைக் குறிப்பிட்டு, முழுவதும் காயமடைந்த ஒரு தொடையின் புகைப்படத்தை பகிர்ந்து அவரைக் கலாய்த்துள்ளார்.

இந்த பதிவு நெட்டிசன்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்