'ஆஸ்திரேலியாவில் ரன் சேஸிங்கில்’... ‘இந்திய அணி வீரர்கள் தடுமாறியது ஏன்’... ‘வெளிப்படையாக பதிலளித்த ஸ்ரேயாஸ்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய ஆடுகளத்தின் தன்மை வேறு விதமாக இருப்பதால், ரன்களை சேஸ் செய்வது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக உள்ளதாக ஸ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

'ஆஸ்திரேலியாவில் ரன் சேஸிங்கில்’... ‘இந்திய அணி வீரர்கள் தடுமாறியது ஏன்’... ‘வெளிப்படையாக பதிலளித்த ஸ்ரேயாஸ்’...!!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 தொடரில் விளையாடுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

அதன்பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி முதல் டி20 தொடரும், டிசம்பர் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. இந்நிலையில், இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாடியது பற்றி, இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:

‘இப்போதுதான் துபாயில் இருந்து இங்கு வந்துள்ளோம். அங்குள்ள ஆடுகளங்களில் அந்த அளவுக்கு பவுன்ஸ் கிடையாது. அதே போல இங்குள்ள பயிற்சி ஆடுகளும், ஆட்டத்திற்கான ஆடுகளிலிருந்து வித்தியாசமாக உள்ளன. எனவே சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.

ஆடுகளத்தின் தன்மை, மைதானத்தில் உள்ள சூழலுக்கு நாங்கள் விரைவாக மாறிக் கொள்ள வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டதும் சிரமமாக இருந்தது. விடுதி அறையில் மட்டுமே இருந்து பயிற்சிக்கு மட்டும் வெளியே வந்து மீண்டும் அறைக்குள் சென்று விட வேண்டும். எனினும் நாங்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்கள். இதுகுறித்து புகார் சொல்ல கூடாது’ என்று அவர் கூறினார்.

மற்ற செய்திகள்