தோனிக்கு இந்த IPL சீசன் தான் கடைசியா?.. வாட்சன் கொடுத்த ரிப்ளை.. கொண்டாடும் Fans..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியுள்ளார்.

தோனிக்கு இந்த IPL சீசன் தான் கடைசியா?.. வாட்சன் கொடுத்த ரிப்ளை.. கொண்டாடும் Fans..!

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வீடியோ கேமை இனி தொடவே மாட்டேன்".. அப்பா கொடுத்த நூதன தண்டனை.. மகன் எடுத்த முடிவு.. திகைக்க வைக்கும் பின்னணி..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது. இதனிடையே ஐபிஎல் குறித்து முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

MS தோனி

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும்.

மேட்ச் பரபரப்பான சூழ்நிலையில் இருக்கும்போதும், பொறுமையுடன் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்வதில் தோனி ஒரு வித்தைக்காரர். இதன் காரணமாகவே ரசிகர்கள் தோனியை கூல் கேப்டன் என்றும் மிஸ்டர் கூல் என்றும் அழைக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

இப்போதைக்கு வாய்ப்பில்ல

இந்நிலையில் இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவாரா? எனவும் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. சில முன்னாள் வீரர்களும் இதுபற்றி பேசிவரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் இதுபற்றி மனம் திறந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனியார் நிகழ்ச்சியில் பேசுகையில்,"இந்த ஐபிஎல் உடன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவார் என நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஃபிட்டாகவே இருப்பதாக கருதுகிறேன். பேட்டிங்கிலும் அவர் கூடுதல் பலமாக திகழ்வார். தோனி அணியில் இருப்பது சென்னை அணிக்கு நல்ல பலமாக அமையும். ஆட்டத்தின் போக்கை நன்கு கணித்து அதற்குத் தகுந்தாற்போல முடிவுகளை எடுக்கக்கூடியவர். சென்னை அணி தொடர்ச்சியாக கோப்பைகளை வென்றதற்கு தோனி முக்கிய காரணம். அவருடைய ஃபிட்னெஸ்ஸை பார்க்கும்போது, அவர் இன்னும் 3 அல்லது 4 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என நினைக்கிறேன்" என தெரிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | 3 சவரன் தங்க செயினை காணோம்.. வீடு முழுசும் தேடுன அப்புறம் நாய் கொடுத்த ஷாக்.. அரண்டு போய்ட்டாரு மனுஷன்..!

CRICKET, SHANE WATSON, MS DHONI, IPL, IPL SEASON

மற்ற செய்திகள்