"செல்ஃபி எடுக்கலைன்னு தாக்குதல்?".. பிரித்வி ஷா புகாரில் கைதான சப்னா கில்.. "அவங்கதான் என்னை தாக்கிட்டாங்க".. சப்னா பதில் புகார்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மீது 10 பிரிவுகளில் சப்னா கில் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"செல்ஃபி எடுக்கலைன்னு தாக்குதல்?".. பிரித்வி ஷா புகாரில் கைதான சப்னா கில்.. "அவங்கதான் என்னை தாக்கிட்டாங்க".. சப்னா பதில் புகார்..!

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | துருக்கியைத் தொடர்ந்து இந்த நாடுகளிலுமா.? அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ப்ரித்வி ஷா. மிக இளம் வயதிலேயே முதல்தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை பிரித்வி படைத்திருந்தார். அறிமுகமான முதல் ரஞ்சி மற்றும் துலீப் கோப்பை போட்டியிலேயே சதமடித்து ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்தவர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தினார் பிரித்வி ஷா. அதில் இந்தியா கோப்பையையும் வென்றிருந்தது.

Sapna Gill Filed case against Prithvi shaw In 10 sections

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணியில் ஆடும் வாய்ப்பையும் பெற்றிருந்த பிரித்வி ஷா, சமீப காலமாக உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால், சர்வதேச அணியில் சிறந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் வேதனையுடனும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு பிரித்வி ஷா சென்று திரும்பிய போது அங்கிருந்த ரசிகர்களுடன் பிரித்வி ஷா செல்பி எடுத்துக்கொண்டதாக சொல்லப்பட்டது. அப்போது பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்களுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தாக்குதலில் முடிய, சப்னா கில் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது பிரித்வி ஷாவும் அவரது நண்பர்களும் போலீசில் புகார் அளித்தனர்.

Sapna Gill Filed case against Prithvi shaw In 10 sections

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். திங்கட்கிழமை வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் இதனை நீட்டிக்க காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், சப்னா கில்லிற்கு ஜாமீன் கொடுப்பதாக நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சப்னா கில் போலீசில் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார்  அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் தன்னை தாக்கியதாகவும் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் சப்னா குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதுபற்றி பேசியுள்ள அவருடைய வழக்கறிஞர்," ப்ரித்வி ஷா, ஆஷிஷ் சுரேந்திர யாதவ், பிரிஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது  34, 120பி, 144, 146, 148, 149, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | 3 வருசமா வீட்டை விட்டு வெளிய வராத பெண்.. பக்கத்து வீட்டுல தனியா இருக்கும் கணவர்.. VIDEO CALL-ல தான் பேசுவாங்களா?".. திடுக் பின்னணி!!

SAPNA GILL, PRITHVI SHAW

மற்ற செய்திகள்