"அவருக்கு மட்டும் சான்ஸ் குடுத்து பாருங்க,.. பல 'வேர்ல்ட் கப்'ப அள்ளிப் போட்டு கொண்டு 'வருவாரு'.." 'இளம்' வீரருக்கு கிடைத்த 'பாராட்டு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது.

"அவருக்கு மட்டும் சான்ஸ் குடுத்து பாருங்க,.. பல 'வேர்ல்ட் கப்'ப அள்ளிப் போட்டு கொண்டு 'வருவாரு'.." 'இளம்' வீரருக்கு கிடைத்த 'பாராட்டு'!!!

அந்த அணி வீரரான சஞ்சு சாம்சன், இரண்டு போட்டிகளிலும் சிக்ஸர் மழை பொழிந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி வெற்றி பெற அவர் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், அவரது திறமையான ஆட்டத்திற்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சஞ்சு சாம்சனின் பேட்டிங்கிற்கு எம்.பி சசிதரூர், தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்தார். அவரது டிவீட்டில், 'பல ஆண்டுகளாக சாம்சனை எனக்கு தெரியும் என்றும், அவருக்கு 14 வயது இருக்கும் போதே நீங்கள் அடுத்த தோனி என அவரிடம் நான் தெரிவித்தேன் எனவும், சசிதரூர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த், 'அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம். அவர் ஒரே ஒரு சஞ்சு சாம்சன் தான். அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வருகிறார். அவருக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால், இப்போது அவர் ஆடுவதைப் போல இந்திய அணிக்காகவும் ஆடி நிச்சயம் நிறைய உலக கோப்பைகளை வென்று கொடுப்பார்' என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சசிதரூரின் பதிவிற்கு கம்பீரும் சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்