"கோலி கேப்டன்சி பண்றப்போ நான் கத்துகிட்ட அந்த ஒரு விஷயம்".. மனம்திறந்த ரோஹித்.. "இப்பவும் அதைத்தான் Try பண்றாராம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

"கோலி கேப்டன்சி பண்றப்போ நான் கத்துகிட்ட அந்த ஒரு விஷயம்".. மனம்திறந்த ரோஹித்.. "இப்பவும் அதைத்தான் Try பண்றாராம்!!

                                Images are subject to © copyright to their respective owners

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி, 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில், ரோஹித் ஷர்மா 120 ரன்கள் எடுத்திருந்தார்.

223 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் சில ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணி சரிந்ததால் தொடர்ந்து இந்திய அணியின் கையே அதிகம் ஓங்கி இருந்தது.

இதனால், ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் அசத்தலாக தொடங்கி உள்ளது. இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 7 விக்கெட்டுகள் மற்றும் 70 ரன்களையும் அடித்து ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

Rohit sharma opens up about he learned from virat kohli captaincy

Images are subject to © copyright to their respective owners

இந்த நிலையில், போட்டிக்கு பின்னர் விராட் கோலி கேப்டன்சியில் இருந்து தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து ரோஹித் பேசிய கருத்துக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

"விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவரது தலைமையில் நான் ஒரு வீரராக ஆடி இருந்தேன். நான் அப்போது ஒரு விஷயத்தை கவனித்தேன். நமக்கு விக்கெட்டுகள் கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் நாம் தொடர்ந்து எதிரணியினருக்கு அழுத்தத்தை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான். அப்போது தான் எதிரணி வீரர்கள் ஏதோ தவறு செய்து விக்கெட்டை கொடுப்பார்கள் என்பதை விராட் கோலி கேப்டன்சி செய்த நேரத்தில் நான் கற்றுக் கொண்டேன்.

Rohit sharma opens up about he learned from virat kohli captaincy

Images are subject to © copyright to their respective owners

அதனை தற்போது நான் முயற்சி செய்து பார்க்கிறேன். எப்போதும் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தான் கவனம் உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு பந்திலும் நாம் எதிரணியினர் விக்கெட்டை எடுக்க வேண்டும் என நினைத்தால் அது நிச்சயம் நடைபெறாது. அப்படி நினைத்த பந்துகளில் விக்கெட் கிடைத்து விட்டால் அதை விட எதுவுமே இருக்காது. அதே வேளையில் அதற்கான அணுகுமுறையை தொடர்ந்து செய்து கொண்டே இருந்து சரியான இடங்களில் பந்து வீசிக் கொண்டே இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

VIRATKOHLI, ROHIT SHARMA, IND VS AUS

மற்ற செய்திகள்